மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மீது தாக்குதல்

by Bella Dalima 10-05-2022 | 3:49 PM
Colombo (News 1st)   மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பேர வாவிக்கு அருகில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு காயமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.