மக்களின் குரலுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும்

மக்களின் குரலுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல் 

by Bella Dalima 10-05-2022 | 7:50 PM
Colombo (News 1st) நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்பதுடன், நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி பதவி விலகுவதே ஒரே வழி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி விலகியதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படக்கூடாது எனவும் ஜனாதிபதியும் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.    

ஏனைய செய்திகள்