சபாநாயகர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

சபாநாயகர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

by Staff Writer 10-05-2022 | 10:00 AM
Colombo (News 1st) பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை(11) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். நாளை(11) முற்பகல் 10 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுததுள்ளதாகவும் தற்போதைய சூழ்நிலையில், கூட்ட நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.