by Staff Writer 10-05-2022 | 11:49 AM
Colombo (News 1st) 'கோட்டாகோகம' எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று(10), 32ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து கட்சி பேதமின்றி மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.