நான்காவது கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை

நான்காவது கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை

நான்காவது கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 May, 2022 | 4:54 pm

Colombo (News 1st) நான்காவது கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நான்காவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இவர்களைத் தவிர 20 முதல் 60 வயதிற்குட்பட்ட, எதிர்ப்பு சக்தி குறைவடைந்தவர்களுக்கும், நாட்பட்ட நோயாளர்களுக்கும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 12 முதல் 16 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்