by Bella Dalima 06-05-2022 | 5:30 PM
Colombo (News 1st) சீனாவின் ஜெஜியாங் மாகாணம் Hangzhou நகரில் செப்டம்பர் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதனால், சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்ஸில் இன்று அறிவித்துள்ளது.
மேலும், புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.