கரணவாய் இளைஞர் கொலையுடன் தொடர்புடைய இருவர் கைது

யாழ். கரணவாய் இளைஞர் கொலையுடன் தொடர்புடைய இருவர் கைது

by Staff Writer 05-05-2022 | 12:57 PM
Colombo (News 1st) யாழ். நெல்லியடி - கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான திக்கம் பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் இறுதிக் கிரியையகள் இன்று(05) இடம்பெற்றன. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.