கிராம்பு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை

கிராம்பு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை

by Staff Writer 05-05-2022 | 6:58 PM
Colombo (News 1st) கிராம்பு உற்பத்தியை மேம்படுத்த ஏற்றுமதி விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராம்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வெற்றுக்காணிகளில் செய்கை மேற்கொள்ளத் தேவையான கிராம்புச் செடிகளில் 50 வீதமானவை மானிய அடிப்படையில் வழங்கப்படும் என ஏற்றுமதி விவசாய திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.