English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 May, 2022 | 12:57 pm
Colombo (News 1st) யாழ். நெல்லியடி – கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான திக்கம் பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் இறுதிக் கிரியையகள் இன்று(05) இடம்பெற்றன.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
01 Jul, 2022 | 07:16 PM
14 Jun, 2022 | 04:18 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS