மகாநாயக்க தேரர்கள் கூறும் விடயத்தை நிராகரிப்பது நல்லதல்ல: கொழும்பு பேராயர் தெரிவிப்பு

by Bella Dalima 04-05-2022 | 7:44 PM
Colombo (News 1st) மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது தலைவர்களின் பொறுப்பு என பரிசுத்த பாப்பரசரை சந்தித்த பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ள கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். அத்துடன், மகாநாயக்க தேரர்கள் கூறும் விடயத்தை நிராகரிப்பது நல்லதல்ல எனவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார். நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், சரியானவற்றை செய்து பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தலைவர்களின் கடமை எனவும் பேராயர் சுட்டிக்காட்டினார். ''ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்றவாறு சட்டங்கள் உருவாக்கப்படுவது கவலைக்குரியது. சட்டம் அவர்களுக்கு மேலாக இருக்க வேண்டும்" என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.