English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 May, 2022 | 3:03 pm
Colombo (News 1st) உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்திற்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு அருகே முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வலுவடைந்தமை தொடர்பாகவும் அங்கு அதிகளவிலான பொலிஸாரின் பிரசன்னம் இருந்ததாகவும் தமக்கு தகவல் கிடைத்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதற்கான முயற்சி இருக்கின்றமையும் தெரியவந்ததாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
உரிமைகளை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் தொடர்பில் இதனை விடவும் பொறுமையுடன் அதிகாரிகள் செயற்பட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, போராட்டங்களும் அமைதியான முறையில் இடம்பெற வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதிக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலரை பொலிஸார் இன்று பிற்பகல் வேளையில் கைது செய்தனர்.
10 ஆண்களும் 03 பெண்களும் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதிக்கு அருகே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
18 Jun, 2022 | 06:46 PM
07 May, 2022 | 05:06 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS