English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 May, 2022 | 8:53 am
Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கியொன்று செயலிழந்துள்ளமையினால், அனல் மற்றும் நீர் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.
03 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்காமல் இருக்கும் நோக்கில் ஆணைக்குழுவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 270 மெகாவாட் மின்பிறப்பாக்கியொன்று செயலிழந்துள்ளதாக நேற்று(03) அறிவிக்கப்பட்டது.
குறித்த மின்பிறப்பாக்கியை புனரமைப்பதற்கு இன்னும் 5 நாட்கள் செல்லுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், இன்றைய தினம்(04) A முதல் W வரையான வலயங்களில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 02 மணித்தியாலங்களுக்கும் மாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
14 Jun, 2022 | 06:31 AM
09 Jun, 2022 | 09:22 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS