இந்தியா பயணிக்க முற்பட்ட நால்வர் வேலணையில் கைது 

சட்டவிரோதமாக இந்தியா பயணிக்க முற்பட்ட நால்வர் வேலணையில் கைது 

by Staff Writer 03-05-2022 | 3:36 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பயணிக்க முற்பட்ட நால்வர் யாழ்ப்பாணம் - வேலணை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறு குழந்தை உட்பட நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நால்வரும் யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.