தேசிய ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம் - சாகர காரியவசம்

by Staff Writer 02-05-2022 | 4:22 PM
Colombo (News 1st) அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் இன்று(02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருடன் உத்தேச தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் ​கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதன்போது தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.