by Staff Writer 01-05-2022 | 2:59 PM
Colombo (News 1st) ரங்கல பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் மீகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த துப்பாக்கி மற்றும் ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 9 மில்லி மீட்டர் நீளமுடைய 12 ரவைகள், 5.26 மில்லி மீட்டர் நீளமுடைய 11 ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
22 மற்றும் 24 வயதுடைய ஓவிட்டிகம மற்றும் யட்டபாத்த பகுதிகளைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.