மகா சங்கத்தினர் அரசாங்கத்திற்கு பிறப்பித்துள்ள கட்டளை 

by Staff Writer 30-04-2022 | 8:35 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்கி மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்காக மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இன்று மகா சங்கத்தினர் பிரகடனம் ஒன்றை வௌியிட்டனர். சுதந்திர சதுக்கத்தில் இன்று கூடிய மகா சங்கத்தினர், அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த பிரகடனத்தை ஏற்படுத்திக்கொண்டனர். மூன்று பீடங்களையும் சேர்ந்த 1000 தேரர்கள் கொழும்பு 7-இல் உள்ள அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு பேரணியொன்றை முன்னெடுத்தனர். மகாநாயக்க தேரர்களின் அறிவிப்பை செயற்படுத்துமாறு வலியுறுத்தும் மகா சங்கத்தினரின் கட்டளைக்கான மாநாடு என இந்த நிகழ்விற்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.   நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையில்லாததால், நாட்டை மீட்டெடுத்து மக்களின் எதிர்ப்பை தணியச் செய்து, வீழ்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என இன்றைய தினம் முன்வைக்கப்பட்ட மகா சங்கத்தினரின் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்