by Staff Writer 30-04-2022 | 4:23 PM
Colombo (News 1st) புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்பட்டு, அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 31 அமைச்சரவை அமைச்சுகள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.