சுயாதீன  உறுப்பினர்கள் - கோபால் பாக்லே சந்திப்பு

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

by Staff Writer 29-04-2022 | 10:11 AM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய பொருளாதார அரசியல் நிலை தொடர்பில் அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்து நேற்று (28) மாலை கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் என உயர்ஸ்தானிகர் இதன்போது கூறியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. நெருக்கடியான நிலையில் இலங்கையுடன் தொடர்ச்சியாக கைகோர்த்துள்ளமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மக்களுக்கு இதன்போது நன்றி தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன குழு, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஏனைய செய்திகள்