சாணக்கியனுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிரான நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு

by Staff Writer 29-04-2022 | 4:19 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுச்சொத்துகளுக்கோ அல்லது தனியார் சொத்துகளுக்கோ பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அவரது பணிப்பின் கீழ் செயற்படும் எவரும் சேதம் ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது என நேற்று (28) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் அறிவித்தது. இந்த கட்டளை 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.