English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Apr, 2022 | 4:10 pm
Colombo (News 1st) தேசிய இணக்க அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
தேசிய இணக்க அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபை ஒன்றை ஸ்தாபித்து, அதனூடாக பிரதமர் மற்றும் அமைச்சரவையை பெயரிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஆளும் கட்சியிலிருந்து சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் தலைமையில் இந்த தேசிய சபை நியமிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
தேசிய இணக்க அரசாங்கத்திற்கான பிரதமர் யார் என்பது குறித்தும் நாட்டின் தற்போதைய நெருக்கடியில் தேவையான அமைச்சுகளின் எண்ணிக்கை தொடர்பிலும் தேசிய சபையினூடாகவே தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மேலும் தெரிவித்தார்.
யாருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது என்பது குறித்தும், இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பிலும் தேசிய சபையே தீர்மானிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
01 Jul, 2022 | 08:09 PM
24 Jun, 2022 | 07:30 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS