வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை

by Staff Writer 28-04-2022 | 9:58 AM
Colombo (News 1st) மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஏனைய பகுதிகளில் 50 மில்லி மீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்காலிகமாக ஏற்படும் மின்னல் மற்றும் காற்று வீசும் சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.