by Staff Writer 28-04-2022 | 9:34 AM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள 'விடுதலைக்கான புரட்சி' பேரணியின் மூன்றாம் நாள் இன்றாகும்(28).
இந்த பேரணி இன்று(28) கலிகமுவவில் இருந்து தங்கோவிட்ட நோக்கி பயணிக்கவுள்ளது.
கண்டியிலிருந்து நேற்று முன்தினம்(26) ஆரம்பிக்கப்பட்ட பேரணியில் அதிகளவானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தப் பேரணி எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.