இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

by Staff Writer 28-04-2022 | 5:14 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் 50 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெற தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.