30 ஆம் திகதி வரையான மின்வெட்டு அட்டவணை

30 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

by Staff Writer 27-04-2022 | 4:16 PM
Colombo (News 1st) நாளை (28) முதல் 30 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. A முதல் L வரையான வலையங்கள் மற்றும் P முதல் W வரையான வலையங்களில் காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த வலையங்களில் மாலை 05 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு வணிக வலயத்தில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   Areas ABCDEFGHIJKLPQRSTUVW: 2 hours from 9am to 5pm 1 hour & 20 minutes from 5pm to 9pm. Area CC: 3 Hours from 6am to 9am