வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம்

வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம்

by Staff Writer 27-04-2022 | 10:06 AM
Colombo (News 1st) பேலியகொடை - பெத்தியாகொட பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து நேற்று(26) பிற்பகல் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.