தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம்

by Staff Writer 27-04-2022 | 9:55 AM
Colombo (News 1st) இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் S.J.V. செல்வநாயகத்தின் 45 ஆவது நினைவு தின நிகழ்வொன்று நேற்று(26) மாலை திருக்கோவிலில் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் பொத்துவில் தொகுதியின் ஏற்பாட்டில் திருக்கோவில் குருகுல மண்டபத்தில் இந்த நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.