18ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் போராட்டம்

18ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் மக்கள் போராட்டம்

by Staff Writer 26-04-2022 | 8:49 AM
Colombo (News 1st) ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் இன்று(26) 18ஆவது நாளாகவும் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கட்சி, இன, மத, மொழி பேதமின்றி போராட்டத்தில் மக்கள் பங்கேற்கின்றனர். இளைஞர் - யுவதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர். இதனிடையே, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொருளாதார நெருக்கடியை கண்டித்தும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.