நிதி கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் - IMF

இலங்கையின் நிதி கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் - IMF

by Staff Writer 26-04-2022 | 12:49 PM
Colombo (News 1st) தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் நிதிக் கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது. இலங்கை வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர் Anne-Marie, ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். நெகிழ்வுத் தன்மையுடன் அந்நிய செலாவணி மாற்றுவீதத்தை பேணிச்செல்ல வேண்டியதன் முக்கியத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை நிதிக் கொள்ளையை கடுமையாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கடந்த வார இறுதி நாட்களில் இலங்கை பிரதிநிதிகளுடன் சாதகமான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.