வேபடயில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

வேபடயில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

by Staff Writer 25-04-2022 | 2:56 PM
Colombo (News 1st) வெலிவேரிய - வேபட பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவருக்கு காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வௌிநாட்டிலிருந்து வந்த 32 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செயயப்பட்டுள்ளதுடன், அவரின் சகோதரி மற்றும் நண்பி ஆகியோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட 37 வயதான சந்தேகநபர், அதே ஆயுதத்தால் தன்னுடைய கழுத்தின் பின்புறத்தை வெட்டிக்கொண்டு அருகிலிருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக க பொலிஸார் கூறினர்.