தற்போதைய ஜனாதிபதி, பிரதமருடனான இடைக்கால அரசாங்கத்தில் இணைவதற்கு தயாரில்லை - எதிர்கட்சி தலைவர்

by Staff Writer 25-04-2022 | 6:46 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை பதவியில் வைத்துக்கொண்டு ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தில் உறுப்பினராகுவதற்கு தாம் தயார் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) தெரிவித்துள்ளார்.