கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 24-04-2022 | 2:54 PM
Colombo (News 1st) வெல்லம்பிட்டிய - மீதொட்டமுல்ல பகுதியில் வெதுப்பகமொன்றுக்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.