மண்டபங்களுக்கான கட்டணம் 40% அதிகரிப்பு 

மண்டபங்களுக்கான கட்டணம் 40% அதிகரிப்பு 

by Staff Writer 23-04-2022 | 3:48 PM
Colombo (News 1st) மண்டபங்களுக்கான கட்டணத்தை 40 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மண்டபங்கள் மற்றும் உணவு விநியோகத்திற்கான சங்கம் அறிவித்துள்ளது. இன்று (23) முதல் கட்டண அதிகரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மண்டபங்கள் மற்றும் உணவு விநியோகத்திற்கான சங்கத்தின் தலைவர் அத்துல களுஆரச்சி தெரிவித்தார். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள மண்டபங்களுக்கு மாத்திரம் 20%அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் முற்பதிவு செய்பவர்களுக்கு 40% கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்