அமைச்சரவை பதவி விலக வேண்டும்: டலஸ் கடிதம்

பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும்: டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம்

by Bella Dalima 22-04-2022 | 5:38 PM
Colombo (News 1st)  பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலகி, தேசிய நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்ட சர்வ கட்சிகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கத்தை அமைத்து சவால்களை வெற்றிகொள்வதறகான சந்தர்ப்பத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க ​வேண்டும் என தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். நெருக்கடி நிலைமையில், பொதுமக்களையும் ஜனநாயகத்தையும் அரச கொள்கைகளையும் பாதுகாத்து, நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசாங்க கட்டமைப்பை மீண்டும் ஸ்தாபிப்பதற்கு சரியானதும் தூர நோக்குடையதுமான தீர்மானத்தை எடுப்பதற்கு தாம் பின்னிற்பதில்லையென அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் உண்மையான இணக்கப்பாட்டுடன் சிறிய அமைச்சரவையை அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்கு நியமிப்பதற்கு தாமதமின்றி செயற்படவேண்டும் என டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.