சட்டவிரோதமாக நாட்டிலிருந்து செல்ல முற்பட்ட இரு இளைஞர்கள் கைது

by Staff Writer 21-04-2022 | 1:26 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தினூடாக நாட்டிலிருந்து செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் இரு இளைஞர்களும் நேற்று(20) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். மன்னார் - பேசாலையை சேர்ந்த 30 மற்றும் 32 வயதான சகோதரர்களே நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடிப் படகொன்றில் சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். நெடுந்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.