பாணந்துறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாணந்துறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; காலி வீதியில் ​போக்குவரத்திற்கு இடையூறு

by Staff Writer 20-04-2022 | 8:54 AM
Colombo (News 1st) காலி - கொழும்பு பிரதான வீதியின் பாணந்துறை நகரில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக காலி வீதி உள்ளிட்ட வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து மக்கள் நேற்று(19) முதல் தொடர்ச்சியாக பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம்(18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, நேற்று(19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.