ஜனாதிபதி செயலணியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் விலகல்

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் இராஜினாமா

by Staff Writer 20-04-2022 | 4:07 PM
Colombo (News 1st) ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இராஜினாமா செய்துள்ளார். ரம்புக்கனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் உள்ளிட்ட மேலும் சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக   அசீஸ் நிஸாருதீன் தெரிவித்தார்.