எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

by Bella Dalima 19-04-2022 | 6:39 PM
Colombo (News 1st) எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். லங்கா IOC நிறுவனத்துடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதற்கமைய, லங்கா IOC மற்றும் CEYPETCO ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் ஒரே அளவில் எரிபொருள் விலையை முன்னெடுத்துச் செல்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார். பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 1613 மில்லியன் ரூபா நாளாந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்டமையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்வதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார்.