உணவுப் பொதிகளின் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு

by Staff Writer 19-04-2022 | 4:55 PM
Colombo (News 1st) உணவுப் பொதிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 20 ரூபாவால் உணவுப் பொதிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். மரக்கறிகள் மற்றும் உணவு தயாரிப்பிற்கான அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.