by Staff Writer 17-04-2022 | 3:16 PM
Colombo (News 1st) இற்றைக்கு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவங்களுக்காகவும் சாபங்களுக்காகவும் ததது இன்னுயிரை தியாகம் செய்தார்.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த பண்டிகையானது இயேசு கிறிஸ்து மனித நேயத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
அவர் இந்த உலகத்தில் வாழ்ந்த போது பரிசுத்தமாகவும் வல்லமையுடனும் மனதுருக்கத்துடனும் மிகுந்த அன்புடன் அற்புதங்களை செய்து குணமாக்கி, பாவத்திலிருந்தும் விடுவித்து வாழ்ந்து காட்டினார்.
இந்த உலகில் வாழும் மக்களின் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை உணர்த்தும் உயிர்த்த ஞாயிறு பண்டிகையை கிறிஸ்தவர்கள் இன்று(17) மிகவும் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.