வெலிமடையில் ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் பலி 

by Staff Writer 16-04-2022 | 5:20 PM
Colombo (News 1st) வெலிமடை - கெப்பட்டிப்பொல பகுதியில் ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மின்வெட்டு காரணமாக கடந்த 29 ஆம் திகதி பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையினால் 38 வயதான தாயும் அவரின் 9 வயதான மகளும் 4 வயதான மகனும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறார்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (15) அதிகாலை தாய் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.