புல்மோட்டையில் மின்னல் தாக்கி இருவர் பலி 

புல்மோட்டையில் மின்னல் தாக்கி இருவர் பலி 

by Staff Writer 16-04-2022 | 3:19 PM
Colombo (News 1st) திருகோணமலை - புல்மோட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (16) அதிகாலை கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இருவரும் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புல்மோட்டை - 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 70 வயதான ஒருவரும், புல்மோட்டை - ஹமாஸ் நகரைச் சேர்ந்த 35 வயதான ஒருவருமே உயிரிழந்துள்ளனர். இருவரின் சடலங்களும் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்