கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்களுக்கு மூடப்படுகிறது

கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்களுக்கு மூடப்படுகிறது

by Staff Writer 16-04-2022 | 7:58 PM
Colombo (News 1st)  5 நாட்களுக்கு கொழும்பு பங்குச்சந்தையை தற்காலிகமாக மூடுமாறு பங்கு பரிவர்த்தனை மற்றும் பிணையங்கள் ஆணைக்குழு கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம், 2022 ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.