எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தி சுற்றுநிருபம் வௌியீடு 

by Bella Dalima 15-04-2022 | 3:34 PM
Colombo (News 1st) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோருக்கு எரிபொருள் விநியோகிப்பதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கான திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், எதிர்வரும் 02 வார காலத்திற்கு மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாவிற்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டிகளுக்கு 1500 ரூபாவிற்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. கார், வேன், ஜீப் உள்ளிட்ட ஏனைய வாகனங்களுக்கு 5000 ரூபாவிற்கு எரிபொருள் விநியோகிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பஸ் உள்ளிட்ட ஏனைய டீசல் வாகனங்களுக்கு பொருந்தாது எனவும் வாகனங்கள் தொடர்பான தகவல்களை உளளடக்கிய ஆவணமொன்று பேணப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொலிஸ், பாதுகாப்பு பிரிவு, அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இதனை கண்காணிக்கவுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் இன்று பிற்பகல் 1 மணி முதல் அமுலாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.