மினுவாங்கொடையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மினுவாங்கொடையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

by Staff Writer 14-04-2022 | 4:26 PM
Colombo (News 1st) மினுவாங்கொடையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 34 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்படும் இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. பெம்முல்ல பகுதியை சேர்ந்த 29 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை மினுவாங்கொடை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.