மெகி சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிலிப்பைன்ஸில் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு 

by Bella Dalima 13-04-2022 | 3:36 PM
Philippines: பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி (Megi) சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மெகி சூறாவளியினால் பல கிராமங்களில் மண்சரிவும் வௌ்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அனர்த்தங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய மாகாணமான  Leyte-இல் உள்ள Baybay நகரை அண்மித்துள்ள கிராமங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஆற்று நீர் பெருக்கெடுத்துள்ளதால் பலர் உயிருடன் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலர் (Pilar) எனும் கிராமத்தில் 80% வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.   இந்நிலையில், அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பிலிப்பைன்ஸின் தேசிய இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.