ஒரு தொகை போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

தென் கடற்பரப்பில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

by Staff Writer 13-04-2022 | 7:30 AM
Colombo (News 1st) தென் கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற படகொன்றுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வு சேவை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் கடற்படை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையினூடாக இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.