எரிபொருள் பதுக்கல்: 67 இடங்கள் சுற்றிவளைப்பு 

எரிபொருள் பதுக்கல்: 67 இடங்கள் சுற்றிவளைப்பு, 10,115 லிட்டர் டீசல் கைப்பற்றல் 

by Bella Dalima 13-04-2022 | 4:03 PM
Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 67 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. பொலிஸார், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 5,690 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், 10,115 லிட்டர் டீசலும் 5,620 லிட்டர் மண்ணெண்ணையும் கைப்பற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 20 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக எரிபொருளை சேகரித்தமை, விற்பனை செய்தமை மற்றும் பதுக்கி வைத்தமை தொடர்பில் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.