by Staff Writer 12-04-2022 | 7:09 PM
Colombo (News 1st) கடந்த வருடத்தில் மாத்திரம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளின் ஏற்றுமதி ஊடாக 836 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 05 வருடங்களுக்குள் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானத்தை 1.5 மில்லியன் டொலராக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனூடாக நாடு எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை வெற்றிகொள்ள முடியுமென கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.