நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை

நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை

by Staff Writer 12-04-2022 | 8:29 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று(12) 75 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(12) பிற்பகல் 1 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.