சாந்த பண்டாரவின் பதவிப் பிரமாணம் குறித்து ரோஹண

சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்தமை கட்சி கொள்கையை காட்டிக்கொடுக்கும் செயல் - ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ

by Staff Writer 12-04-2022 | 7:13 AM
Colombo (News 1st) சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்தமை, கட்சியின் கொள்கையை காட்டிக்கொடுக்கும் செயலென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர், பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார பதவியேற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்த பதவியை ஷஷீந்திர ராஜபக்ஸ வகித்திருந்தார்.